Tuesday, 24 November 2020
திருந்திய நெல் சாகுபடி சதுர நடவு முறையில் கோனோ வீடேர்
Monday, 9 November 2020
தமிழ்நாடு அரசின் புதுமை முயற்சி திட்டத்தின் நெற்பயிரில் இயந்திரமயமாக்கல் பற்றி செயல் விளக்கம்
9/11/2020, தமிழ்நாடு அரசின் புதுமை முயற்சி திட்டத்தின் கீழ் மதுரை விவசாயக் கல்லூரி சார்பில் மேலவளவு கிராமத்தில் நெற்பயிரில் இயந்திரமயமாக்கல் பற்றி செயல் விளக்கம் நடைபெற்றது
நெற்பயிரில் இயந்திரங்களின் பயன்பாடு பற்றி உதவிப் பேராசிரியர் இ. சுப்பிரமணியன் அவர்களும் ஒருங்கிணைந்த இயந்திர அறுவடைக்கான நெல் மற்றும் பயிறு வகை ரகங்கள் பற்றி உதவிப் பேராசிரியர் க.தங்கராஜ் அவர்களும் விளக்கமளித்தனர். கருவிகளின் செயல்விளக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் இரா தமிழ்செல்வன் மற்றும் செ.ஆதித்யன் அவர்களும் வழங்கினார்
குறிப்பாக இந்த செயல்விளக்கம் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகளுக்கு மதுரை விவசாயக்கல்லூரி உழவியல் துறை சார்பில் நடத்தப்பட்டது
தமிழ்நாடு அரசின் புதுமை முயற்சி திட்டத்தின் கீழ் உயிர் உரம் (அசோஸ்பைரில்லம்) மற்றும் வேப்பெண்ணை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு இடுபொருளாக வழங்கப்பட்டது
உலக வங்கி உதவி திட்டம் மாநில ஆலோசகர் மேலவளவில் ஆய்வு
04/11/2020, மேலவளவில் உலக வங்கி உதவி திட்டம் மாநில ஆலோசகர் ஷாஜகான் (Chennai IAMWARM MDPU Agri Consultant) அவர்கள் ஆய்வு செய்தார். நிகழ்வில் சுப்புராஜ் (மதுரை வேளாண்மை துணை இயக்குநர்) அவர்கள் , மதுரைசாமி (கொட்டாம்பட்டி வேளாண் உதவி இயக்குநர்) அவர்கள், தனசேகரன் (துணை வேளாண் அலுவலர், வேளாண்மை துறை) அவர்கள் , அபிநயா அவர்கள் (AO - JDA Office IAMWARM) , பாலசுப்ரமணியன் அவர்கள் (வேளாண் உதவி அலுவலர்), தவப்பிரியா அவர்கள் (வேளாண் உதவி அலுவலர்) உடனிருந்தனர்.
மேலவளவு உயிரியல் காரணிகள் உற்பத்திமையம், உழவர் உற்பத்தியாளர் குழு, திருந்திய நெல் சாகுபடி நடவுப்பணிகளை ஆய்வு செய்தார்.
நிகழ்வில் மேலவளவு உயிரியல் காரணிகள் உற்பத்திமையம் தயாரித்துவரும் டிரைக்கோடெர்மா விரிடி விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது









