Tuesday, 13 April 2021

வாழையில் வைக்கோல் மூடாக்கு #helps-to-save-water#



மேலவளவு, நீர் சேமிப்பு, களைக் கட்டுப்பாடு மற்றும் களை சார்ந்த செலவீனங்கள் குறைப்பு , மற்றும் மண் வளம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வைக்கோல் கொண்டு மண் மேற்பரப்பில் பரப்பி தாள் மூடாக்கு செய்யப்பட்டுள்ளது.

மூடாக்கு மண் காற்று நுண்ணுயிர்கள் மற்றும் பயிர் இவற்றிற்கு ஒத்திசைவான நுண்சூழலை உருவாக்குகிறது. வைக்கோல் மூடாக்கு நீர் ஆவியாவதை தடுத்து நிலத்தின் ஈரப்பதத்தை பாதுகாக்கிறது. மேலும் களை செடிகளை கட்டுபடுத்துகிறது. இதன் மூலம் களை கட்டுப்பாடுக்கான செலவினங்கள் குறைகிறது. நிலத்தின் மேற்பகுதி  எப்பொழுதும் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதால் நுண்ணுயிர்கள் மற்றும் மண்புழுக்கள் செயல்பாடுகள் அதிகமாகின்றன. மண்புழுக்களும், நுண்உயிரிகளும் அதிகஅளவில்  பெருகுகின்றன. 

மூடாக்கு மட்கி மட்கு பயிருக்கு சிறந்த உரமாகிறது, மூடாக்கினால் உருவான மட்கு பெரும்பாலான நுண்ணூட்டங்களைப் பெற்றுள்ளது, மண்ணை பெருமழை, வெப்பம், பனியில் இருந்து பாதுகாக்கிறது, மழை நீரில் மண் அரிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது. வெப்பத்தில் நுண்ணுயிர்கள் இறந்து போகாமல் பாதுகாக்கிறது. அதிக பனியில் நுண்ணுயிர்கள் செயலற்ற நிலைக்கு செல்வதிலிருந்து பாதுகாக்கிறது.

மூடாக்குடன் வாழைக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டு இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படுகிறது. 

சொட்டு நீர் பாசனத்தால் 50 சதவீதம் வரை நீர்,உரம், மின் சக்தி மற்றும் வேலையாட்கள் கூலி சேமிக்கப்படுகிறது . பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல், 30 சதவீதத்திற்கும் மேல்  அதிகமாகிறது.

சரியான அளவு நீரினை சீரான இடைவெளியில் பயிரின் வேர் மண்டலத்திற்கு அருகிலேயே அதன் தேவைக்கேற்ப அளிக்க முடிகிறது. நீர் வயல் முழுவதுமின்றி பயிருக்கு மட்டுமே அளிக்கப்படுகின்றது. மண்ணின் ஈரப்பதமானது எப்போதும் தோட்ட அளவுக்கு ஏற்றவாறு அளிக்கப்படுகின்றது. இதனால் பயிரானது சீராகவும், விரைவாகவும் வளர்கின்றது.

வாழை  சாகுபடியில் தற்போது வாடல் நோயால் அதிக பொருளாதார இழப்பீடு ஏற்படுகிறது.வாடல்  நோய் அதிகளவில் வாழை தோட்டத்தில் நீர் பாய்ச்சும் பொது பாதிக்கப்பட்ட வாழையிலிருந்து பிற வாழைகளுக்கு பரவுகிறது. சொட்டு நீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சும் பொது பெருமளவில் நீரினால் பரவும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது . 

வாழை தோட்டத்தில் நேரடியாக அதிக அளவு நீர் பாய்ச்சும் பொது அழுத்தத்தால் வாழைக்கு வைக்கப்பட்ட உரங்கள் நிலத்தின் ஆழத்திற்கு கடத்தப்பட்டு பெருமளவு உரங்கள் வீணாகின்றன . சொட்டுநீர் மூலம் பாய்ச்சுவதால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுவதில்லை. உரங்கள் முழுமையும் பயிருக்கு கிடைத்து அதிக மகசூல் கிடைக்கின்றன




ஊட்டமேற்றிய மண்புழு உரம்

 


மேலவளவு உயிரியல் காரணிகள் உற்பத்தி மையம் தரமான மண் புழு உரத்தில் அனைத்து வகையான பேரூட்ட மற்றும் நுண்ணுட்ட சத்துக்கள் மற்றும் வேர் அழுகல், கிழங்கு அழுகல் மற்றும் வாடல் நோய் கட்டுப்படுத்தும் வகையில் ஊட்டமேற்றி இன்று விற்பனையை துவக்கியுள்ளது.

இந்த உரத்தில் அனைத்துவகையான சத்துக்களும் கிடைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. தென்னை, பழ வகைகள் மற்றும் மாடித் தோட்டங்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த உரத்தில் அனைத்து வகையான உயிர் உரங்கள், உயிரியல் பூஞ்சண கொல்லிகள் , பஞ்ச காவியா , பயன்மிகு நுண்ணுயிரிகள் மற்றும் வேப்பம்புண்ணாக்கு கொண்டு சரியான அளவில் எடுத்துக்கொள்ளப்பட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது.
மேலவளவு உயிரியல் காரணிகள் உற்பத்தி மையம் இயற்கை உரங்களை உற்பத்தி செய்துவருகிறது.தற்போது அதிக ரசாயன உரங்கள் பயன்பாட்டால் விளைநிலங்கள் மலடாகி மகசூலிழப்பை சந்தித்து வருகின்றன. ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் ஊட்டமேற்றிய மண் புழு உரம் தயாரித்து விற்பனையை துவக்கியுள்ளது
நிகழ்ச்சியில் கொட்டாம்பட்டி வட்டார உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்