Tuesday, 13 April 2021

ஊட்டமேற்றிய மண்புழு உரம்

 


மேலவளவு உயிரியல் காரணிகள் உற்பத்தி மையம் தரமான மண் புழு உரத்தில் அனைத்து வகையான பேரூட்ட மற்றும் நுண்ணுட்ட சத்துக்கள் மற்றும் வேர் அழுகல், கிழங்கு அழுகல் மற்றும் வாடல் நோய் கட்டுப்படுத்தும் வகையில் ஊட்டமேற்றி இன்று விற்பனையை துவக்கியுள்ளது.

இந்த உரத்தில் அனைத்துவகையான சத்துக்களும் கிடைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. தென்னை, பழ வகைகள் மற்றும் மாடித் தோட்டங்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த உரத்தில் அனைத்து வகையான உயிர் உரங்கள், உயிரியல் பூஞ்சண கொல்லிகள் , பஞ்ச காவியா , பயன்மிகு நுண்ணுயிரிகள் மற்றும் வேப்பம்புண்ணாக்கு கொண்டு சரியான அளவில் எடுத்துக்கொள்ளப்பட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது.
மேலவளவு உயிரியல் காரணிகள் உற்பத்தி மையம் இயற்கை உரங்களை உற்பத்தி செய்துவருகிறது.தற்போது அதிக ரசாயன உரங்கள் பயன்பாட்டால் விளைநிலங்கள் மலடாகி மகசூலிழப்பை சந்தித்து வருகின்றன. ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் ஊட்டமேற்றிய மண் புழு உரம் தயாரித்து விற்பனையை துவக்கியுள்ளது
நிகழ்ச்சியில் கொட்டாம்பட்டி வட்டார உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்







No comments:

Post a Comment