Friday, 12 August 2022

நிலக்கடலையில் வேரழுகல் நோய் மேலாண்மை#root-disease-management-in-groundnut#


 வேரழுகல் நோயானது ‘மேக்ரோபோமினா பேசியோலினா’ என்ற பூஞ்சாணத்தால் இளம் செடிகளிலும் வளர்ந்த செடிகளிலும் தோன்றுகிறது. 

விதைத்த 30 முதல் 50 நாட்கள் வரை இந்த நோய் தாக்குதல் காணப்படும். நோய் கிருமிகள் மண்ணிலிருந்து செடிகளுக்கு பரவுகிறது. 

நிலக்கடலையில் நோய் தாக்கிய செடிகளின் வேர்கள் மற்றும் தண்டின் அடிப்பகுதி அழுகிக் காணப்படும். நோய் தாக்கிய செடிகள் காய்ந்து இறந்து விடுகின்றன.

இதனால் ஆங்காங்கே செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும். நோய் தாக்குண்ட செடிகள் காய்ந்து விடுவதால் பல இடங்களில் நிலம் சொட்டை சொட்டையாய் காணப்படும். இலைகள் மஞ்சள் நிறமடைந்து பழுத்து உதிர்ந்து விடும். பாதிக்கப்பட்ட செடியும் சீக்கிரமாக காய்ந்து விடும். நோயினால் பாதிக்கப்பட்ட செடியை மெதுவாக இழுத்தாலும் எளிதாக கையோடு வந்து விடும்



கட்டுப்படுத்தும் முறைகள்:

தரமான விதைகளை ‘டிரைக்கோடெர்மா விரிடி’ 4 கிராம் / கிலோ அல்லது பேசில்லஸ் சப்டிலிஸ் 10 கிராம் / கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி அவசியம் செய்ய வேண்டும்.

விதைத்த 20 – 30 நாட்களுக்குள் ‘பேசில்லஸ் சப்டிலிஸ்’ / ‘டிரைக்கோடேர்மா விரிடி’ 2.5 / கிலோ / எக்டேர் என்ற அளவில் அதனுடன் 50 கிலோ தொழு உரம் கலந்து இட வேண்டும்.



டிரைக்கோடெர்மா விரிடி, பேசில்லஸ் சப்டிலிஸ் தேவைக்கு 

தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை - கொட்டாம்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் கீழ்  மேலவளவில் "உயிரியல்  காரணிகள்  உற்பத்தி மையம்"  15 மகளிர் விவசாயிகளை கொண்டு  துவங்கப்பட்டு தற்போது தரமான டிரைக்கோடெர்மா விரிடி , பேசில்லஸ் சப்டிலிஸ் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்து வருகிறது.

தேவைப்படும் விவசாயிகள் மேலவளவு உயிர் காரணி உற்பத்திமையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.  வெளி மாவட்டங்களுக்கு கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.  

டிரைக்கோடெர்மா விரிடி - Rs 100/கிலோ 

பேசில்லஸ் சப்டிலிஸ் -  Rs 100/கிலோ


தொடர்புக்கு 8838547932.

உயிரியல்  காரணிகள்  உற்பத்தி மையம்,

மேலவளவு,

கொட்டாம்பட்டி வட்டாரம், 

மேலூர் வட்டம், 

மதுரை மாவட்டம்.

Monday, 27 June 2022

நெல் சாகுபடி உயிரியல் முறை நோய்க்கட்டுப்பாடு #biofertilizers-bacillus-subtilis#




பேசில்லஸ் சப்டில்லிஸ் என்பது மண்ணில் வாழும் ஒரு பேக்டீரியம் ஆகும். இது பயிரில் தோன்றும் நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும், பயிர் வளர்ச்சியை தூண்டுவதிலும் முக்கிய பங்கு வகுக்கிறது. இப்பாக்டடீரியம் கடினமான புறத்தோலையுடைய என்டோஸ் போரை உற்பத்தி செய்வதால், வறண்ட சூழ்நிலையையும் தாங்கி வளரக்கூடியது. இப்பேசில்லஸ் சப் டில்லிஸ் நுண்ணுயிரானது சூடோமோனாஸ் ஃபுளூரோசன்ஸை விட பயிர்களுக்கு அதிக பாதுகாப்பளி ப்பதால் இதனை சூடோமோனாஸ்க்கு மாற்றாக பயன்படுத்தலாம்.


நெற்பயிர்களை பாதிக்கும் குலை நோய், இலைப் புள்ளி நோய், பாக்டீரியா இலைக்கருகல் நோய், இலையுறைக் கருகல் நோய், இலையுறை அழுகல் நோய், தண்டழுகல் நோய், தூர் அழுகல் நோய் மற்றும் நெற்பழ நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்த பயன்படும் ரசாயனக் கொல்லிகள் பெரியளவில் தீங்கு ஏற்படுத்தக் கூடியவை. அவற்றைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சுழல் மாசுபாடு, நோய்க் காரணிகளுக்கு எதிர்ப்புச்சக்தி அதிகரிப்பு, உணவுப் பொருள்களில் நச்சுத்தன்மை, உயிரினங்களுக்கு தீங்கு போன்றவை ஏற்படுகின்றன.ஆனால், உயிர் எதிர்கொல்லியான பேசில்லஸ் சப்டில்லிஸ் பயன்படுத்துவதால் இத்தகைய தீங்குகள் ஏற்படுவதில்லை. 

நெல்லில் பயன்படுத்தும் முறை

விதைநேர்த்தி

 பேசில்லஸ் சப்டில்லிஸை தண்ணீரில் நன்கு கரைத்து விதை நெல்லை இக்கரைசலினுள்  உறவைத்து விதையினை நாற்றங்காலில்  விதைக்கவும். 


நெல் நாற்றின் வேர்களை  நனைத்தல்

நாற்றுப்பறியின் போது ஒரு கிலோ பேசில்லஸ் சப்டில்லிஸை கரைத்து அக்கரைசலில் பறித்த நாற்றுகளின் வேர்கள் நன்கு நனையும்படி 20 நிமிடம் உறவைத்து பின்பு நடவு வயலில் நடவும். 

நேரடியாக வயலில் இடுதல்

வயலில் ஒரு கிலோ பேசில்லஸ் சப்டில்லிஸை 20 கிலோ நன்கு மக்கிய தொழு எருவுடன்  கலந்து 1 ஏக்கர் பரப்பளவு வயலில் சீராக தூவ வேண்டும். 


தெளிப்பு முறை

 ஒரு ஏக்கருக்கு  90  லிட்டர் நீரில் 500 கிராம் பேசில்லஸ் சப்டில்லிஸை  கரைத்து நெற்பயிர் முழுவதும் நன்கு நனையும் படி குளிப்பாட்டவும். 


பேசில்லிஸ் சப்டில்லிஸ்  சிறப்புகள் 

1) இதனை சூடோமோனாஸ் ஃபுளோரோசன்ஸ்க்கு மாற்றாக பயன்படுத்தலாம். 

2)  இப்பேக்டீரியம் உயிர் எதிர்பொருளை சுரப்பதுடன், நைட்ரஜன் என்ற தாதுப்பொருளை நிலைநிறுத்துவதால், நெற்பயிரின் நோயைக்  கட்டுப்படுத்துகிறது.

3) இப்பேக்டீரியம் தாவரத்தினுள் வாழும் தன்மையுடையதால் மண்ணில் வாழும் பூஞ்சாணக் காரணிகளை நன்றாக கட்டுப்படுதும். 



குறிப்பு: 

1) இந்த பாக்டீரியா கலவையை தயாரித்த 4 மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும். 

2) இதனை அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டிரியா போன்ற  அனைத்து உயிர் உரங்களுடன் கலந்து வயலில் இடலாம். 

3) இதனை பூஞ்சான மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் கலத்தல் கூடாது. 

பேசில்லஸ் சப்டிலிஸ் -  ரூபாய் 100/கிலோ

தொடர்புக்கு 8838547932.

உயிரியல்  காரணிகள்  உற்பத்தி மையம்

மேலவளவு IPM கிராம குழு ,

கொட்டாம்பட்டி வட்டாரம்,

மேலூர் வட்டம்.

மதுரை மாவட்டம்

Tuesday, 11 January 2022

இயற்கை முறையில் வாழை சாகுபடி - மாதிரி செயல் விளக்க திடல் #organic-banana-farming-cultivation-practices#

 இயற்கை முறையில் வாழை சாகுபடி - மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு - மாதிரி செயல் விளக்க திடல்


மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு சார்பாக வாழை சாகுபடியில் இயற்கை முறையில் உற்பத்தி செலவை குறைக்கும் பொருட்டு வைக்கோல் மூடாக்கு , சொட்டு நீர் பாசனம் , இயற்கை உரம் மற்றும் உயிர் உரங்கள் பயன்படுத்தப்பட்டு தற்போது அறுவடை செய்யப்படுகிறது.

உயிர் மூடாக்கு 
விதை கிழங்கு பதிக்கும்போது சணப்பு மற்றும் தக்கைப்பூண்டு விதைக்கப்பட்டது .


50வது நாள் சணப்பு மற்றும் தக்கைப்பூண்டு செடிகளை புடிங்கி வாழை கட்டையை சுற்றி போடப்பட்டு ஊட்டமேற்றிய தொழுஉரம், கடலை புண்ணாக்கு மற்றும் வேப்பம்புண்ணாக்கு கலவை இடப்பட்டு பாத்தி அமைக்கப்பட்டது.

வைக்கோல் மூடாக்கு 



பாத்தி போடப்பட்டு வைக்கோல் கொண்டு மூடாக்கு போடப்பட்டது. வைக்கோல் மூடக்கால் களை கட்டுப்படுத்தப்பட்டது. களை கட்டுப்படுக்காக உயிர் மற்றும் வைக்கோல் மூடாக்கை தவிர எந்த செலவினங்களும் செய்யப்படவில்லை. . வைக்கோல் மூடக்கால் நிலத்தில் ஈரப்பதம் நிலைநிறுத்தப்பட்டது. வைக்கோல் சிறுக சிறுக மக்கி உரமானது அதற்குள் வாழை முழு வளர்ச்சியடைந்தது.



மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டு நீர் பாசனம் செய்யப்பட்டது



ஒவ்வொரு மாதமும் சொட்டுநீர் பாசனம் மூலம் மேலவளவு உயிரியல் காரணிகள் உற்பத்தி மையம் தயாரிப்பான ட்ரிகோடெர்மா விரிடி ஒரு கட்டைக்கு 10 கிராம் வீதம் வழங்கப்பட்டது. சொட்டுநீர் பயன்படுத்தப்பட்டதால் வேலையாட்கள் செலவு குறைக்கப்பட்டது. வாடல் நோய் மற்றும் இழை கருகல் கட்டுப்படுத்தப்பட்டது.


ரசாயனம் முற்றிலும் தவிர்க்கப்பட்டது. பூ ஓடித்தவுடன் பஞ்சகவியா மற்றும் கடலை புண்ணாக்கு கரைசல் கட்டப்பட்டது.
தொடர் மழையால் சற்று பின்னடைவு ஆனால் இயற்கை சாகுபடியால் பெரும் மகசூல் இழப்பு தவிர்க்கப்பட்டதாக உணர்கிறோம்.
நஞ்சில்லா அதிக ருசியான நாட்டு வாழைப்பழம். நாட்டு வாழைப்பழம் பெரும்பாலும் மருந்தாக பயன்படுத்துவர். கண்டிப்பாக மருந்தாகவும் சுவையான உணவாகவும் அமையும் என்ற மன மகிழ்ச்சி