Friday, 12 August 2022

நிலக்கடலையில் வேரழுகல் நோய் மேலாண்மை#root-disease-management-in-groundnut#


 வேரழுகல் நோயானது ‘மேக்ரோபோமினா பேசியோலினா’ என்ற பூஞ்சாணத்தால் இளம் செடிகளிலும் வளர்ந்த செடிகளிலும் தோன்றுகிறது. 

விதைத்த 30 முதல் 50 நாட்கள் வரை இந்த நோய் தாக்குதல் காணப்படும். நோய் கிருமிகள் மண்ணிலிருந்து செடிகளுக்கு பரவுகிறது. 

நிலக்கடலையில் நோய் தாக்கிய செடிகளின் வேர்கள் மற்றும் தண்டின் அடிப்பகுதி அழுகிக் காணப்படும். நோய் தாக்கிய செடிகள் காய்ந்து இறந்து விடுகின்றன.

இதனால் ஆங்காங்கே செடிகள் வளர்ச்சி குன்றி காணப்படும். நோய் தாக்குண்ட செடிகள் காய்ந்து விடுவதால் பல இடங்களில் நிலம் சொட்டை சொட்டையாய் காணப்படும். இலைகள் மஞ்சள் நிறமடைந்து பழுத்து உதிர்ந்து விடும். பாதிக்கப்பட்ட செடியும் சீக்கிரமாக காய்ந்து விடும். நோயினால் பாதிக்கப்பட்ட செடியை மெதுவாக இழுத்தாலும் எளிதாக கையோடு வந்து விடும்



கட்டுப்படுத்தும் முறைகள்:

தரமான விதைகளை ‘டிரைக்கோடெர்மா விரிடி’ 4 கிராம் / கிலோ அல்லது பேசில்லஸ் சப்டிலிஸ் 10 கிராம் / கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி அவசியம் செய்ய வேண்டும்.

விதைத்த 20 – 30 நாட்களுக்குள் ‘பேசில்லஸ் சப்டிலிஸ்’ / ‘டிரைக்கோடேர்மா விரிடி’ 2.5 / கிலோ / எக்டேர் என்ற அளவில் அதனுடன் 50 கிலோ தொழு உரம் கலந்து இட வேண்டும்.



டிரைக்கோடெர்மா விரிடி, பேசில்லஸ் சப்டிலிஸ் தேவைக்கு 

தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை - கொட்டாம்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் கீழ்  மேலவளவில் "உயிரியல்  காரணிகள்  உற்பத்தி மையம்"  15 மகளிர் விவசாயிகளை கொண்டு  துவங்கப்பட்டு தற்போது தரமான டிரைக்கோடெர்மா விரிடி , பேசில்லஸ் சப்டிலிஸ் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்து வருகிறது.

தேவைப்படும் விவசாயிகள் மேலவளவு உயிர் காரணி உற்பத்திமையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.  வெளி மாவட்டங்களுக்கு கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.  

டிரைக்கோடெர்மா விரிடி - Rs 100/கிலோ 

பேசில்லஸ் சப்டிலிஸ் -  Rs 100/கிலோ


தொடர்புக்கு 8838547932.

உயிரியல்  காரணிகள்  உற்பத்தி மையம்,

மேலவளவு,

கொட்டாம்பட்டி வட்டாரம், 

மேலூர் வட்டம், 

மதுரை மாவட்டம்.

No comments:

Post a Comment