Wednesday, 18 August 2021

வாழை சாகுபடியில் அடியுரமாக டிரைக்கோடெர்மா விரிடி பயன்பாடு - #banana-with-trichoderma-viride#

 


வாழை சாகுபடியில் வாடல் , கிழங்கு அழுகல் மற்றும் வேரழுகல் நோயை கட்டுப்படுத்த அடியுரமாக பயன்படுத்துவதற்கு விரிடி மற்றும் பேசிலஸ் சப்டிலிஸ் கொண்டு மண் புழு உரம் மூலம் மதிப்புக்கூட்டி பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்து வருகிறது. ஏக்கருக்கு 50 கிலோ பரிந்துரைக்கப்படுகிறது.
நோய்களை உண்டாக்கும் பூஞ்சானங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி வேருக்கு பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது.
பயிர்களில் உண்டாகும் வேரழுகல், நாற்றழுகல், வாடல் நோய்களை கட்டுப்படுத்தும் .பயிர்களுக்குத் தேவையான( ஹார்மோன்கள் ) உற்பத்தி செய்கிறது.மண்ணில் உள்ள மக்காத குப்பைகளை எளிதாக, விரைவாக மக்க வைத்து உரமாக்குகின்றன. வேரின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. இதனால் வேரின் செயல்திறன் அதிரிக்கிறது.

50 கிலோ மூடை Rs . 1500/-

தொடர்புக்கு 8838547932.

உயிரியல் காரணிகள் உற்பத்தி மையம்
மேலவளவு IPM கிராம குழு ,
கொட்டாம்பட்டி வட்டாரம்,
மேலூர் வட்டம்.
மதுரை மாவட்டம்

தென்னையில் டிரைக்கோடெர்மா விரிடி பயன்பாடு - #trichoderma-viride#





குருத்தழுகல், சாறு வடிதல், தஞ்சாவூர் வாடல் நோய், இலைக்கருகல், இலைப்புள்ளி ஆகியவை தென்னையைத் தாக்கும் முக்கிய நோய்களாகும். இவற்றைக் கட்டுப்படுத்த பயன்படும் ரசாயனக் கொல்லிகள் பெரியளவில் தீங்கு ஏற்படுத்தக் கூடியவை. அவற்றைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சுழல் மாசுபாடு, நோய்க் காரணிகளுக்கு எதிர்ப்புச்சக்தி அதிகரிப்பு, உணவுப் பொருள்களில் நச்சுத்தன்மை, உயிரினங்களுக்கு தீங்கு போன்றவை ஏற்படுகின்றன.ஆனால், உயிர் எதிர்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் இத்தகைய தீங்குகள் ஏற்படுவதில்லை. இந்த முறையைக் கையாளும்போது சூடோமோனஸ் புளுரசன்ஸ்/பேசிலஸ் சப்டிலிஸ் என்ற நன்மை தரக்கூடிய பாக்டீரியாவும், டிரைக்கோடெர்மா விரிடி என்ற நன்மை தரக்கூடிய பூஞ்சாணமும் சிறப்பாகச் செயல்பட்டு தென்னையைத் தாக்கும் பல நோய்களைக் கட்டுப்படுத்துகின்றன.

மேலும் இவை நீடித்த நன்மை தருவதோடு, தென்னை மரத்தின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கின்றன.ஆண்டுக்கு 5 கிலோ வேப்பம்புண்ணாக்கு, 50 கிலோ மக்கிய சாண எருவுடன், 200 கிராம் சூடோமோனஸ் புளுரசன்ஸ் பொடியை கலந்து மண்ணில் இடுவதால் குருத்தழுகல், இலைக்கருகல் ஆகிய நோய்களின் தாக்குதலைக் குறைக்கலாம்.
ஒரு மரத்திற்கு 100 கிராம் சூடோமோனஸ் புளுரசன்ஸ், 100 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி, 10 கிலோ தொழுவுரம் ஆகியவற்றை கலந்து, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மண்ணில் இடுவதால் தஞ்சாவூர் வாடல் நோய், சாறு வடிதல் நோய் ஆகியவை தாக்காமல் தென்னை மரத்தைப் பாதுகாக்கலாம்.
நன்மைகள்:
டிரைக்கோடெர்மா விரிடி நோய்களை உண்டாக்கும் பூஞ்சானங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி வேருக்கு பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது. இதனை எல்லா பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். பயிர்களில் உண்டாகும் வேரழுகல், நாற்றழுகல், வாடல் நோய்களை கட்டுப்படுத்தும் .பயிர்களுக்குத் தேவையான( ஹார்மோன்கள் ) உற்பத்தி செய்கிறது.மண்ணில் உள்ள மக்காத குப்பைகளை எளிதாக, விரைவாக மக்க வைத்து உரமாக்குகின்றன. வேரின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. இதனால் வேரின் செயல்திறன் அதிரிக்கிறது.

ஒரு கிலோ 135/-.
தொடர்புக்கு 8838547932.

உயிரியல் காரணிகள் உற்பத்தி மையம்
மேலவளவு IPM கிராம குழு ,
கொட்டாம்பட்டி வட்டாரம்,
மேலூர் வட்டம்.
மதுரை மாவட்டம்

Tuesday, 17 August 2021

புழுதியில் நேரடி நெல் விதைப்பு கருவி மூலம் விதைப்பு #Direct-paddy-sowing#


மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு, நெல் சாகுபடியில் உற்பத்தி செலவை குறைக்கும் பொருட்டு மதுரை வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வேளாண்மை துறை உதவிகளுடன் தொழில்நுட்ப பயிற்சிகள் பெற்று கடந்த ஒரு வருடங்களாக மேலூர் பகுதி விவசாயிகளுக்கு குறைந்த விதை மற்றும் குறைந்த செலவில் நேரடி நெல் விதைப்பு செய்து வருகிறது.


புழுதியில் நேரடி நெல் விதைப்பு கருவி மூலம் விதைப்பு 

கடந்த கோடை பருவத்தில் மேலூர் பகுதி பல்வேறு கிராமங்களில் 75 ஏக்கரில் மாதிரி திடலாக நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

9/8/2021 சூரக்குண்டு கல்லம்பட்டியில் இயற்க்கை விவசாயி தியாகராஜன் அவர்களுக்கு மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் நேரடி நெல் விதைப்பு கருவி மூலம் மூன்று ஏக்கரில் கருப்பு கவுனி நெல் கொடுக்கப்பட்டது.

புழுதியில் நேரடி நெல்விதைப்புக்காக நெல் விதைக்கும் கருவியில் கொழு போன்ற பட்டை இணைக்கப்பட்டுள்ளது. அவை மண்ணில் விழும் விதைகளை மூடிவிடுகின்றன.

நேரடி நெல் விதைப்பு

மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு நெல் சாகுபடியில் செலவினங்களை குறைத்து மகசூலை அதிகப்படுத்தும் நோக்கில் விவசாயிகளுக்கு பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டு உதவிவருகிறது.

விதைத்து 9வது நாள்  

நேரடி நெல் விதைப்புக் கருவியின் மூலம் வரிசை முறையில் நெல் விதைப்பு, கோனோவீடர் கொண்டு களை எடுப்பு போன்ற பணிகளுக்கு குழுவிலிருந்து மாவட்ட அளவில் விவசாயிகளுக்கு தேவைப்படும் ஆட்களை அனுப்பி உதவிவருகிறது.

விதைத்து 23வது நாள் கோனோவீடர் கொண்டு களை எடுப்பு பணி

நேரடி நெல் விதைப்புக் கருவியின் மூலம் நெல்லை நேரடியாக விதைப்பதால் விதை தேவைப்படும்  மொத்த அளவில் 60முதல் 75% வரை விதையின் அளவு குறைகிறது.

நடவு செய்யும் பயிரை விட நேரடி நெல் விதைப்பில் மூலம்  நெற்பயிர் 10 முதல் 15 நாட்களுக்கு முன்பாகவே அறுவடைக்கு தயாராகி விடுகிறது.

நேரடி நெல் விதைப்பு செய்தவுடன் நீர்ப்பாசனம் செய்யும்பொழுது காய்ச்சலும் பாய்ச்சலுமாக இருக்க வேண்டும் இதன் காரணமாக நீர் சேமிப்பு மொத்த பரப்பளவில் 15 முதல் 30 சதவீதம் வரை நமக்கு சேமிக்க முடிகிறது.

இந்த விதை கருவியை பயன்படுத்தி நெல் விதைப்பு செய்வதன் காரணமாக ஒரு பயிருக்கும் இன்னொரு பயிருக்கும் இடைப்பட்ட இடைவெளி  ஒரே அளவில் இருக்கும் மேலும் சரியான நெல் பயிர்களில் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.


ஒரே நாளில் இரண்டு பேர் சேர்ந்து இரண்டரை ஏக்கர் வரை நெல்  விதைப்பு செய்ய முடியும். இதன் மூலம் ஆட்களின் கூலி அதிகம் மிச்சப்படுத்த முடியும். தற்போது விதைப்புக்கு ஒரு ஏக்கருக்கு 1000த்திற்கும் குறைவாகவே செலவாகிறது. இதன்முலம் விவசாயிகள் ஏக்கருக்கு 6000 முதல் 9000 வரை மிச்சமாகிறது.

விதைக்கப்பட்ட ஒவ்வொரு வயல்வெளிக்கும் குழு  நேரடியாக   சென்று பயிர்களை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் தேவையான அலையோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது

விதைக்கப்பட்ட ஒவ்வொரு நிலமும் அந்தந்த கிராமத்தில் மாதிரி செயல்விளக்க திடலாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு விவசாயிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். வரும் பருவத்தில் அதிக விவசாயிகள் நேரடி நெல் விதைப்பை பயன்படுத்துவார்கள் என நம்புகிறோம்.

தினமலர் நாளிதழ் செய்தி