மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு, நெல் சாகுபடியில் உற்பத்தி செலவை குறைக்கும் பொருட்டு மதுரை வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் வேளாண்மை துறை உதவிகளுடன் தொழில்நுட்ப பயிற்சிகள் பெற்று கடந்த ஒரு வருடங்களாக மேலூர் பகுதி விவசாயிகளுக்கு குறைந்த விதை மற்றும் குறைந்த செலவில் நேரடி நெல் விதைப்பு செய்து வருகிறது.
![]() |
| புழுதியில் நேரடி நெல் விதைப்பு கருவி மூலம் விதைப்பு |
கடந்த கோடை பருவத்தில் மேலூர் பகுதி பல்வேறு கிராமங்களில் 75 ஏக்கரில் மாதிரி திடலாக நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
9/8/2021 சூரக்குண்டு கல்லம்பட்டியில் இயற்க்கை விவசாயி தியாகராஜன் அவர்களுக்கு மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் நேரடி நெல் விதைப்பு கருவி மூலம் மூன்று ஏக்கரில் கருப்பு கவுனி நெல் கொடுக்கப்பட்டது.
புழுதியில் நேரடி நெல்விதைப்புக்காக நெல் விதைக்கும் கருவியில் கொழு போன்ற பட்டை இணைக்கப்பட்டுள்ளது. அவை மண்ணில் விழும் விதைகளை மூடிவிடுகின்றன.
![]() |
| நேரடி நெல் விதைப்பு |
மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு நெல் சாகுபடியில் செலவினங்களை குறைத்து மகசூலை அதிகப்படுத்தும் நோக்கில் விவசாயிகளுக்கு பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டு உதவிவருகிறது.
![]() |
| விதைத்து 9வது நாள் |
நேரடி நெல் விதைப்புக் கருவியின் மூலம் வரிசை முறையில் நெல் விதைப்பு, கோனோவீடர் கொண்டு களை எடுப்பு போன்ற பணிகளுக்கு குழுவிலிருந்து மாவட்ட அளவில் விவசாயிகளுக்கு தேவைப்படும் ஆட்களை அனுப்பி உதவிவருகிறது.
நேரடி நெல் விதைப்புக் கருவியின் மூலம் நெல்லை நேரடியாக விதைப்பதால் விதை தேவைப்படும் மொத்த அளவில் 60முதல் 75% வரை விதையின் அளவு குறைகிறது.
நடவு செய்யும் பயிரை விட நேரடி நெல் விதைப்பில் மூலம் நெற்பயிர் 10 முதல் 15 நாட்களுக்கு முன்பாகவே அறுவடைக்கு தயாராகி விடுகிறது.
நேரடி நெல் விதைப்பு செய்தவுடன் நீர்ப்பாசனம் செய்யும்பொழுது காய்ச்சலும் பாய்ச்சலுமாக இருக்க வேண்டும் இதன் காரணமாக நீர் சேமிப்பு மொத்த பரப்பளவில் 15 முதல் 30 சதவீதம் வரை நமக்கு சேமிக்க முடிகிறது.
இந்த விதை கருவியை பயன்படுத்தி நெல் விதைப்பு செய்வதன் காரணமாக ஒரு பயிருக்கும் இன்னொரு பயிருக்கும் இடைப்பட்ட இடைவெளி ஒரே அளவில் இருக்கும் மேலும் சரியான நெல் பயிர்களில் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.
ஒரே நாளில் இரண்டு பேர் சேர்ந்து இரண்டரை ஏக்கர் வரை நெல் விதைப்பு செய்ய முடியும். இதன் மூலம் ஆட்களின் கூலி அதிகம் மிச்சப்படுத்த முடியும். தற்போது விதைப்புக்கு ஒரு ஏக்கருக்கு 1000த்திற்கும் குறைவாகவே செலவாகிறது. இதன்முலம் விவசாயிகள் ஏக்கருக்கு 6000 முதல் 9000 வரை மிச்சமாகிறது.
விதைக்கப்பட்ட ஒவ்வொரு வயல்வெளிக்கும் குழு நேரடியாக சென்று பயிர்களை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் தேவையான அலையோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது
விதைக்கப்பட்ட ஒவ்வொரு நிலமும் அந்தந்த கிராமத்தில் மாதிரி செயல்விளக்க திடலாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு விவசாயிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். வரும் பருவத்தில் அதிக விவசாயிகள் நேரடி நெல் விதைப்பை பயன்படுத்துவார்கள் என நம்புகிறோம்.
![]() |
| தினமலர் நாளிதழ் செய்தி |






No comments:
Post a Comment