Thursday, 30 September 2021

மண் வளம் காக்க TN-IAMP திட்டத்தின் மூலம் உதவி #TN-IAMP#



மேலவளவு கிராமத்தில் வேளாண்மை துறை மற்றும் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பயிர் நோயியல்  துறை உதவியிடம் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும்  திட்டம் TN-IAMP Phase II உப்பார் நதி  உபவடி நிலப்பகுதி திட்டத்தின் மூலம் 300 ஏக்கருக்கும் மேலான தக்கைப் பூண்டு விதைகள் கிடைக்கப்பெற்று தற்போது பரவலாக விவசாயிகள் விதைத்து நெல் நடவு பணிகளுக்கு தயாராகி வருகின்றனர் 



குறிப்பாக குஞ்சுங்கறந்தான் குளத்தின் பாசனத்திற்கு உட்பட்ட  அனைத்து வயல்களிலும் விதைத்து தற்போது தக்கைப்பூண்டை மடக்கி உழவு செய்துவருகின்றனர்.

இதன் மூலம் மண்  வளம் மேம்பட்டு நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் செயல்பாடு அதிகரித்து மகசூல் அதிகரிக்கும்,களைக்கான செலவீனங்கள்   குறையும் மற்றும் ரசாயன உரச்செலவு குறையும் என்பதை உணர்ந்து ஆர்வமாக விவசாயிகள் விதைத்து நெல் நடவு பணிகளுக்கு தயாராகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

அதிக ரசாயன உர பயன்பாட்டால் மண்வளம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மண்வளத்தை மீட்டெடுக்க TN-IAMP திட்டம் விவசாயிகளுக்கு  பேருதவியாக இருக்கிறது . சென்ற வருடம் 250க்கும் மேற்பட்ட குருசிறு விவசாயிகள் பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


வேளாண்மை துறை மற்றும் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பயிர் நோயியல்  துறைகளுக்கு விவசாயிகளின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு













No comments:

Post a Comment