Wednesday, 18 September 2019

சுற்றுசூழல் விழிப்புணர்வு மற்றும் மரம் நடும் நிகழ்வு

 மேலவளவு 17/09/2019

சுற்றுசூழல் விழிப்புணர்வு மற்றும் மரம் நடும்  நிகழ்வு


மதுரை வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் நடைபெற்ற சுற்றுசூழல் விழிப்புணர்வு மற்றும் மரம் நடும் நிகழ்வு இன்று (17/09/2019) மேலவளவு மற்றும் குன்னராம்பட்டி கிராமங்களில் நடைபெற்றது.

 மதுரை வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர்  முனைவர் செல்வி ரமேஷ் அவர்கள் தலைமையில் தொழில்நுட்ப வல்லுநர்கள்  முனைவர் இரா.அருண் குமார், முனைவர் சீ.கிருஷ்ணகுமார், முனைவர் உஷா ராணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இன்று மேலவளவு ஒடுங்காண் குளத்தில் நடைபெற்ற  நிகழ்வில் ஒடுங்காண் குள பாசன தாரிகள் மற்றும்  மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு  உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மதுரை வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர்  முனைவர் செல்வி ரமேஷ் அவர்கள் முதல் கன்றை நட தொடர்ந்து  முனைவர் இரா.அருண் குமார், முனைவர் சீ.கிருஷ்ணகுமார், முனைவர் உஷா ராணி, ஒடுங்காண் குளம் பொறுப்பாளர் திரவிய பாண்டி ,  மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு செயலாளர் சிதம்பரம் ஆகியோர் நடவு செய்தனர்.

தற்போது  ஒடுங்காண் குளம் பாசன தாரிகள் மற்றும்   தானம் வயலக அறக்கட்டளை உதவியுடன் விவசாயிகளால் குடிமராமத்து பணி சிறந்தமுறையில் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இன்று மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் மேலவளவு துணை மின் நிலைய கட்டு மான பணிகள் நிறைவடையும் தருவாயில்  பார்வையிட்டனர்




No comments:

Post a Comment