Friday, 11 September 2020

JUN 2020 - மேலவளவில் பருத்தி இயந்திரம் மூலம் அறுவடை செயல்விளக்கம்

 

23/6/2020, மேலவளவில் மதுரை வேளாண் அறிவியல் நிலையம் சார்பாக பருத்தி, வெண்டை இயந்திரம் மூலம் அறுவடை, தோட்ட பயிர் நாற்று நாடாவுக்கான இயந்திரம் செயல்பாடு குறித்த நேரடி செயல்விளக்க வயல்வெளி பயிற்சி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்வி ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்ச்சியில் தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் இரா. அருண்குமார், தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் ச.ஆரோக்கிய மெரி (மனையியல்), கொட்டாம்பட்டி உதவி வேளாண்மை  அலுவலர் பாலசுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.


இன் நிகழ்ச்சியில் மேலவளவு, கச்சிராயன்பட்டி பகுதி பருத்தி, வெண்டை  சாகுபடி விவசாயிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் விவசாயி செல்லம் பருத்தி தோட்டத்தில் பருத்தி அறுவடை இயந்திரம் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்துகாண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து விவசாயிகள்  கருவியை இயக்கி செயல்முறைகளை கற்றுக்கொண்டனர்.
இந்த கருவியை கொண்டு பருத்தி செடியிலிருந்து பஞ்சை  பிரித்தெடுத்து சேகரிக்க ஒருவரே போதுமானதாகும் இக்கருவியின் மூலம்  ஒரு நாளைக்கு ஒரு நபர் 10 முதல் 15 கிலோ வரை எடுக்கலாம். இவ்வாறு பிரித்தெடுக்கும் பருத்தியானது இலை, தழைகள் மற்றும் தூசியின்றி சுத்தமாக இருக்கும்.    இக்கருவியின் எடை குறைவாக இருப்பதால் பெண்களும் எளிதில் கையாள முடியும். அறுவடைக்கான செலவுகள் குறையும். மேலும் தற்போது ஆட்கள் பற்றாக்குறையுள்ள  சூழ்நிலையில் விவசாயிகளுக்கு இந்த கருவி பயனுள்ளதாக இருக்கும் என கேட்டுக்கொண்டனர் .  
  
மேலும் வெண்டை அறுவடைக்கான கருவி ,  தோட்ட பயிர் நாற்று நாடாவுக்கான கருவி மற்றும் மானாவாரி தோட்டங்களில் உரம் இடும் கருவி ஆகியவை குறித்த செயல்விளக்கம் விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு மற்றும்  கிராம IPM IAMP மகளிர் குழு செய்திருந்தது.
 
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து விவசாயிகளும் முக கவசத்துடம் சமூக இடைவெளியில் கலந்துகொண்டனர்.



x

No comments:

Post a Comment