Thursday, 5 September 2019

Sep 2019 - மேலவளவில் வேளாண் அறிவியல் நிலையம் வயல்வெளி ஆய்வு

04-09-2019

 
வாழை உற்பத்தியில் நுண்ணுட்ட சத்துக்களின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மேலவளவில் வேளாண் அறிவியல் நிலையம்  மூலம் செயல்விளக்க திடல் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகளிடையே  அமைத்துள்ளனர்.

நேற்று திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்வி ரமேஷ் அவர்கள் தலைமையில் முனைவர் சீ.கிருஷ்ண குமார்  அவர்கள் மேலவளவில் வயல்வெளி ஆய்வு மேற்கொண்டு  வாழை செயல்விளக்க திடலை பார்வையிட்டார். கடந்த மாதம்  பனானா சக்தி (வாழை நுண்ணுட்டக் கலவை) பயன்பாடு குறித்து மேலவளவு  உழவர் உற்பத்தியாளர்  குழு விவசாயிகளுக்கு   நேரடி செயல்விளக்கமளித்திருந்தனர். அது குறித்த ஆய்வினை மேற்கொண்டனர்.

மேலும் வாழையில் உரம், பூச்சி  மற்றும் நீர் மேலாண்மை பற்றிய கருத்துக்களை விவசாயிகளிடையே கலந்துரையாடினார்.


1 comment: