ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழுவின் சார்பாக உறுப்பினராக உள்ள திரு ராஜேஷ் கண்ணா அவர்களின் தோட்டத்தில் நாற்றங்கால் பண்ணை முனைவர் திருமதி.செல்வி ரமேஷ்,திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம் மதுரை அவர்களின் தலைமையில் முனைவர் திரு. இரா.அருண் குமார், தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர்,வேளாண் அறிவியல் நிலையம் மதுரை அவர்களால் துவங்கப்பட்டது.
மேலவளவு சுற்று வட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் தற்போது தோட்ட பயிர்களான கத்தரி,தக்காளி மற்றும் மிளகாய் நாற்றுக்களுக்கு ஓட்டன்ச்சத்திரம் மற்றும் ஆண்டிபட்டிக்கு நெடுந்தூரம் பயணம் செய்து நாற்றுகளை வாங்கிவருகின்றனர். மேலும் நெடுந்தூரம் மற்றும் வெப்பநிலை மாறுபாடு காரணங்களினால் நாற்றின் உயிர் பிடிப்பு விகிதம் குறைவாக உள்ளது.
குழுவின் நோக்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை சார்ந்த அனைத்து பயிர்களின் நாற்றுகளை நவீன தொழில்நுட்ப முறையில் உற்பத்தி செய்து எங்கள் பகுதி விவசாயிகளிடம் தரமான நாற்றுகளை குறைவான விலைகளில் கொண்டு சேர்ப்பது மற்றும் மகசூலை அதிகரித்து விவசாயிகளின் வருவாயை பெருக்குவது குழுவின் நோக்கமாகும்
அதன் பொருட்டு இன்று முனைவர் திரு. இரா.அருண் குமார் அவர்கள் முதல் மிளகாய் விதையை போட தொடர்ந்து குழு செயலாளர் சிதம்பரம், பொருளாளர் சௌந்தரராஜன் மற்றும் குழு விவசாயிகள் அனைவரும் விதையை பாவி இனிதே தொடங்கப்பட்டது.
விதை பண்ணைக்கான குழுவின் பயணம்
விதை பண்ணையை கருத்தில் கொண்டு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை கோடை கால பயிற்சியில் தோட்டக்கலை பயிர் வளர்ப்பு பற்றிய முகாமில் நமது குழுவிலிருந்து சௌந்தரராஜன் , கவி சர்மா மற்றும் ராஜேஷ் கண்ணா கடந்த கோடை காலத்தில் பயிற்சி பெற்றனர்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் , மதுரையின் மூலம் நடத்திய ஒரு மத கால skill training program ல் தேனீ வளர்ப்பு மற்றும் நாற்றாங்கால் பராமரிப்பு பயிற்சியை மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ் கண்ணா மற்றும் ரதிஷ்
பெற்றுள்ளனர் .
அதற்க்கான சான்றிதழை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விரிவாக்க இயக்குனர் முனைவர் ம.ஜவகர்லால் அவர்களால் வழங்கப்பட்டது.

தற்போது தோட்டக்கலையின் தொழில் பழகுநர் ஓராண்டு பயிற்சி திட்டத்தில் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ் கண்ணா மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் பயிற்சியில் உள்ளனர்.
இத்துடன் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் அறிவியல் நிலையம் உதவியுடன் மற்றும் குழு மூத்த விவசாயிகளின் அனுபவங்களையும் மூலதனமாக கொண்டு இளம் விவசாயிகளாக ராஜேஷ் கண்ணா, பாண்டியராஜன் ,சௌந்தரராஜன் , கவி சர்மா மற்றும் ரதிஷ் ஆகியோர் விதை பண்ணையை வழிநடத்துவார்.
தேவை
விதை, கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த உதவிகளை வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் அறிவியல் நிலயத்திடம் எதிர்நோக்கியுள்ளோம்
உணவூட்டும் விவசாயிக்கு உயிரூட்டுவோம்





































