Tuesday, 27 August 2019

July 2019 - அசோலா வளர்ப்பு பயிற்சி மற்றும் பயிர் காப்பீட்டுத்திட்டம் விழிப்புணர்வு முகாம்

18/07/2019 அன்று  மேலவளவு வீரகாளியம்மன் கோவில் திடலில் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு  தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின்  வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை   (ATMA)  திட்டத்தின் கீழ் அசோலா வளர்ப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி   மற்றும் தமிழ்நாடு வேளாண்மை துரையின்   பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் விழிப்புணர்வு முகாம் மதுரை சாமி ( உதவி இயக்குனர், வேளாண்மை துறை)  தலைமையில்  நடைபெற்றது.

இதில் பூச்சியியல் நிபுணர்  நீ செல்வம் ( வேளாண்மை உதவி இயக்குனர், பயிர் காப்பிட்டு திட்டம் , மதுரை),
 மதுரை சாமி ( உதவி இயக்குனர், வேளாண்மை துறை),
தனசேகரன் (துணை வேளாண் அலுவலர்,  வேளாண்மை துறை),
பா.ராஜதுரை (கொட்டாம்பட்டி வட்டார தொழிநுட்ப மேலாளர்),
பிரியங்கா மற்றும் கண்ணன் , கொட்டாம்பட்டி வட்டார உதவி தொழில் நுட்ப மேலாளர்) ஆகியோர் கலந்துகொண்டனர்.

 ராஜதுரை அவர்கள் அசோலா வளர்ப்புக்கான செயல் விளக்க திடல் அமைத்து உழவர் உற்பத்தியாளர் குழு விவசாயிகளிடையே நேரடி செயல் விளக்கமளித்தார். மேலும் கால்நடைகளுக்கு அசோலாவை எவ்வாறு பயன்படுத்துவது பற்றி விவசாயிகளிடையே கலந்துரையாடினர். விவசாயிகள் அசோலாவை வளர்க்கும்போது தீவனத்துக்கான செலவு குறைகிறது. 

பூச்சியியல் நிபுணர்  நீ செல்வம் அவர்கள்  பயிர் காப்பீட்டின் அவசியத்தை பற்றி விவசாயிகளிடையே கலந்துரையாடினர். மேலும் பயிர்களில் பூச்சி மேலாண்மை பற்றி நன்மை - தீமை செய்யும் பூச்சிகளை பற்றியும், பயிர்களுக்கு நன்மை செய்யும் பூச்சிகளை கவர்ந்து இழுக்கும் தன்மையுடைய பயிர். எடுத்துக்காட்டாக ஆமணக்கு,  மற்றும் செண்டுமல்லி உள்ளிட்டவை நன்மை செய்யும் பூச்சிகளை அதிகளவில் கவர்ந்து இழுப்பதால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பூச்சியை கட்டுப்படுத்த முடியும். பயிர்களில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த ரசாயன உரத்தை பயன்படுத்துவதைவிட, இணை மற்றும் துணை பயிர்களை வளர்த்து செலவின்றி இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம் என விவசாயிகளிடையே கலந்துரையாடியது சிறப்பம்சமாகும். 




No comments:

Post a Comment