Monday, 26 August 2019

May 2019 - சீரான மின்சாரம் வழங்க கோரி போராட்டம்

மேலவளவு பகுதிகளில் மின் பற்றாகுறை, விவசாயிகள் பரிதவிப்பு

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா மேலவளவு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக   மின் பலு (voltage) மிகவும் குறைவாக அதாவது 90 - 120 க்கும் குறைவாக உள்ளது. அதனால் குடிநீர், தெரு விளக்கு, வீட்டு விளக்குகள் , வீட்டு உபயோக மின் சாதனங்கள், கிணறுகளில் உள்ள முன் மோட்டார்கள் இயங்கவில்லை.

தற்போது  110/11 KV நரசிங்கம்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது

கிணறுகளில் தண்ணீர் இருந்தும் தென்னை, வாழை, பருத்தி  , எள், மாட்டு தீவன புள்  ,மற்றும் தோட்ட பயிர்கள்  போன்ற பயிர்களை காப்பாற்ற முடியாத அளவுக்கு விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகின்றனர். 

2013ல்  கடும் வறட்சியின் காரணமாக மேலவளவு சுற்று வட்டார கிராமங்களில்  70% த்திற்கு மேல் உள்ள தென்னை, மா, கொய்யா, எலும்பிச்சை, முந்திரி மற்றும் பழ தோட்டங்களை இழந்துள்ளோம். அப்போது காப்பாற்றிய மரங்களை   தற்போது மின்சார பற்றாக்குறையால் தணண்ணீர் இருந்தும் இழக்கும் சூழலில் உள்ளோம்.

மழையும் பொய்த்து விட்டதால் பயிர்களை காப்பாற்ற முடியாத சூழலில் உள்ளோம்.

இது சம்பந்தமாக EB யில் பலமுறை நேரில் உழவர் உற்பத்தியாளர்கள் குழு, மேலவளவு சார்பாக அணுகியும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

இதனால் மேலவளவு உழவர் உற்பத்தியாளர்கள் குழு மற்றும் பொது மக்கள் சார்பாக மின் செயற்பொறியாளருக்கு  (மின் பகிர்மானம் தெற்க்கு, மேலூர்)  மனுவை நேரில் வழங்கியுள்ளோம். மேலும் இதன் நகலை 

1. உயர்திரு மேற்பார்வை பொறியாளர் அவர்கள் , மின் பகிர்மான கழகம், கே புதூர், மதுரை 

2. உயர்திரு வட்டாச்சியர் அவர்கள், மேலூர் 

3. உயர்திரு உதவி கண்காணிப்பாளர் அவர்கள், காவல் துறை, மேலூர் 

ஆகியோருக்கு நேரில் வழங்கியுள்ளோம்.

அதன் தொடர்ச்சியாக 22/05/2019 காலை 9 மணிக்கு விவசாயிகள் மேலூர் தெற்குப்பட்டி மின்சார அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தி  உள்ளோம்.

மேலும் சீரான மின்சாரம் வழங்க கோரி உழவர் உற்பத்தியாளர் குழு மற்றும் சுற்று வட்டார கிராம பொது மக்கள் சார்பாக 03/06/2018 அன்று காலை மேலவளவு பஞ்சாயத்து அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடை பெற இருந்த நிலையில் 2/6/2019 மதியம் 2.30 மணியளவில் வட்டாச்சியர் அலுவலகத்தில் வட்டாச்சியர், மின் செயற்பொறியாளர், மின் பொறியாளர், காவல் சார்பு ஆய்வாளர் மற்றும் 7 மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் மின் துறை அதிகாரிகள் மின் அழுத்தம் குறையாமல் மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் இந்தவாரம் நடைபெறும் பராமரிப்பின் பொழுது மின் கசிவுகள் தடுக்கப்பட்டு மேலும் மின் அழுத்தம் கூட்டி தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்துள்ளனர்.

இதனால் நாளை 3-6-2019 அன்று நடை பெற இருந்த சாலை மறியல் போராட்டம் விளக்கி கொள்ளப்பட்டது.

மேலவளவு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் குறைவான மின்சாரத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு  ஏற்பட்ட அவஸ்தைகளை பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியின் வாயிலாக அரசு அதிகாரிகளின் கவனத்திற்க்கு எடுத்துச்செல்ல உதவிய அனைவருக்கும் உழவர் உற்பத்தியாளர் குழு சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் 

மேலும் ஊடகத்தின் கவனத்தால் மேலவளவு துணை மின் நிலைய வேலைகள் அரசால் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

 





No comments:

Post a Comment